Home இலங்கை நாமல் குமாரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீண்ட நேர விசாரணை….

நாமல் குமாரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீண்ட நேர விசாரணை….

by admin

ஊழல் ஒழிப்பு பிரிவின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீண்ட நேர விசாரணைகளை நடாத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடச்சியாக இடம்பெற்ற 10 மணி நேர விசாரணைகளின் பின்னர் இலங்கை நேரம் நேற்று இரவு அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதியையும் கோத்தபாய ராஜபக்ஸவையும், மாகந்துரே மதுஷ் என்பவரைக் கொண்டு, படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, கண்டியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த, பிரதக் காவற்துறை மா அதிபர் நாலக்க சில்வாவே, இவ்வாறு தெரிவித்திருந்தாரென, அந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நாமல் குமார தெரிவித்திருந்தார்.

இவரது கூற்றுத்தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி காவற்துறை அதிகாரி தலைமையிலான காவற்துறைக் குழு, கடந்த 14ஆம் திகதியன்று வறக்காபொலவிலுள்ள நாமல் குமாரவின் வீட்டுக்குச் சென்று, விசாரணைகளை நடத்தி, வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டது. அன்றிரவு 11 மணிமுதல், மறுநாள் காலை 6:15 மணிவரையிலும், 7 மணிநேரம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதென, காவற்துறைத் தரப்புத் தகவல்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More