Home இந்தியா எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான கண்டியில் நினைவகம்?

எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான கண்டியில் நினைவகம்?

by admin


மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான இலங்கையின் கண்டியில் அவருக்கு நினைவகம் மற்றும் சிலை அமைக்க கோரி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எம்.ஜி.ஆர். பேரன் வலியுறுத்தி உள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான இலங்கையின் கண்டியில் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூர்யா, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுப்பிள்ளை ராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர்சரத் ஏக்கநாயக உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் பாக்யராஜ் தலைமையில் பட்டிமன்றம் இடம்பெற்றது. இதில் நடிகர்கள் பாண்டியராஜன், ரமேஷ் கன்னா, நடிகை மதுமிதா கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்புல் உள்ள அலரி மாளிகையில் எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் சந்தித்தார்.

அந்த சந்திப்பில் “கண்டியில் எம்.ஜி.ஆர். நினைவகம் மற்றும் திருவுருவசிலை அமைக்க வேண்டும். இதனால் 2 நாடுகளுக்கு இடையே அதிக நல்லுறவு வளரும். மேலும் இங்கு இலட்சக்கணக்கில் தமிழக சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கண்டி எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு புனித தலமாக மாறும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை உன்னிப்பாக கேட்ட ரணில் விக்ரமசிங்க, திரையுலகிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார். மேலும் குமாரின் வேண்டுகோளை பரிசீலிப்பதாக தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எம்.ஜி.ஆர். உருவம் பதித்த பட்டு சால்வையை குமார் அணிவித்தார். இச்சம்பவத்தின்போது தமிழக அமைச்சர் செங்கோட்டையன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More