Home இலங்கை அரசாங்கத்தின் இயலாமையினாலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி

அரசாங்கத்தின் இயலாமையினாலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி

by admin


அரசாங்கத்தின் இயலாமையாயினாலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது அதளபாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கின்றது எனவும் அனைத்துதுறைகளுமே மிகவும் மோசமான வீழ்ச்சிகளையும் நிர்வாக சீர்கேடுகளையும் சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானதொரு நிலையில் நாட்டைக் கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தினால் முடியாத காரியம் என்பதனால் தேர்தல் ஒன்றின் ஊடாகவே தீர்வுகாண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More