Home உலகம் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதில் புதிய கட்டுப்பாடு?

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதில் புதிய கட்டுப்பாடு?

by admin

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்ட்’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசா வைத்திருப்பவர்கள் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து பணி செய்வதற்கு முன்னைய ஒபாமா அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதியை திரும்பப்பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் குடியிருப்பதற்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்ட்’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, அரசுக்கு அளித்துள்ள ஆலோசனையில், அமெரிக்காவில் உணவு மற்றும் நிதி உதவி பெற்று வந்த பிற நாட்டினர் அல்லது பெற விரும்புகிற பிற நாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனையை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, உத்தரவு பிறப்பித்தால் இதுவும் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு பெரும் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ள இந்த திட்டத்திற்கு முகப்புத்தகம் ;, மைக்ரோசொப்ட், டிராப்பாக்ஸ், யாகூ, கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என அந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More