Home இலங்கை 62 ஆயிரத்து 338 இலங்கையர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

62 ஆயிரத்து 338 இலங்கையர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

by admin

62 ஆயிரத்து 338 இலங்கையர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.,இவ்வாறு தடைவிதிக்கப்பட்டவர்களுள் பாதுகாப்பு பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் மற்றும் இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கமைய இவ்வாறு இவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த தடைப்பட்டியலில் அரசியல்வாதிகள், போதை வர்த்தகர்கள், புலம்பெயர்ந்தோர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்பட்டவர்கள் நாட்டினை விட்டு வெளியேறுவதனை தடுப்பதற்காக அரச புலனாய்வு பிரிவு, விமான நிலைய அதிகாரிகள், குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ; தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More