Home இலங்கை யாழ் மாவட்டத்தில், காரைநகர் பிரதேசத்திலேயே போதைப்பொருள் பாவனை அதிகம்….

யாழ் மாவட்டத்தில், காரைநகர் பிரதேசத்திலேயே போதைப்பொருள் பாவனை அதிகம்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேசத்திலேயே போதைப்பொருள் பாவனை அதிகமாக உள்ளது. அங்கு போதைப்பொருள் கடத்தல்களும் விற்பனையும் தாராளமாக இடம்பெறுகின்றன என யாழ். மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவற்றைக் கட்டுப்படுத்த காரைநகரில் தனியான காவல் நிலையம் ஒன்றை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஊர்காவற்றுறை பிரிவுப் பொறுப்பான உதவிக் காவற்துறை அத்தியட்சகருக்கு யாழ்.மாவட்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் கூட்டத்தில் வைத்தே அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது பிரதேச செயலக ரீதியாக போதைப்பொருள் பாவனை தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது. இதில் யாழ்.மாவட்டத்திலேயே காரைநகர் பிரதேச செயலக பிரிவிலேயே போதைப்பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனக் கூறப்பட்டது.

அங்கு போதைப் பொருள் கடத்தல்கள் – விற்பனையும் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு அங்கு நிரந்தர காவற்துறை நிலையம் இல்லாமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More