Home பிரதான செய்திகள் ரங்கன ஹேரத்திலேயே பல விடயங்கள் தங்கியுள்ளன

ரங்கன ஹேரத்திலேயே பல விடயங்கள் தங்கியுள்ளன

by admin

இங்கிலாந்து அணி எந்த சூழ்நிலையிலும் விளையாடக்கூடிய சிறந்த அணியாக காணப்படுவதனால் இங்கிலாந்து அணி இலங்கைக்கு கடும் சவாலாக விளங்கும் எனத் தெரிவித்துள்ள குமார் சங்ககார இங்கிலாந்து அணியை டெஸ்ட்போட்டிகளில் தோற்கடிப்பதற்காக இலங்கை அணி மிகச்சிறப்பாக விளையாடவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகில் அவர்களே மிகச்சிறந்த சகலதுறை அணி என தான் நினைப்பதாக தெரிவித்துள்ள அவர் இங்கிலாந்து அணியில் பத்தாவது வீரர் வரை சகலதுறை வீரராக உள்ளனர் எனவும் அவர்களிடம் மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசையுள்ளது எனவும் ; தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணி தன்வசமுள்ள நிரந்தரமான ஒரு துடுப்பாட்ட வரிசையை மாற்றவில்லை எனவும் அந்த அணியில் அடித்துஆடக்கூடியவர்களும் சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாக ஆடக்கூடியவர்களும் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் எனவும் அவர்களால் சூழலிற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் சங்ககார தெரிவித்துள்ளார்

முதல் இனிங்சில் சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெறுவதில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் எவ்வளவு சிறந்து விளங்குகின்றனர் என்பதே பல விடயங்களை தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள குமார் சங்ககார ரங்கன ஹேரத்திலேயே பல விடயங்கள் தங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More