Home இலங்கை மன்னாரில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி…

மன்னாரில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி…

by admin

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியை இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்துள்ளனர்.

தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் செனரத் பண்டார தலைமையில் காலை 8 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது. இந்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி எதிர்வரும் இரு தினங்கள் இடம் பெறவுள்ளது.

பாடசாலைகள், பொது இடங்களில் குறித்த சிரமதானப்பணிகள் இடம் பெறவுள்ளதோடு,குறித்த பணியில் 70 அதிகாரிகளும்,800 இராணுவ வீரர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More