Home இலங்கை மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை விடுதியில், தூக்கில் தொங்கினார் ஆசிரியர்….

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை விடுதியில், தூக்கில் தொங்கினார் ஆசிரியர்….

by admin


மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விடுதியில், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்Ls;shu;. ,இந்த சம்பவம் இன்று (08.10.18) காலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைதீவு, கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எம். பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த ஆசிரியர் கலாச்சாலையில், கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான முதலாம் பிரிவில் பயிற்சி பெற்றுவரும் இவர் சம்பவதினமான இன்று வழமை போல கலாச்சாலையில் பயிற்சி பெற்றுவந்த நிலையில், காலை 11 மணிக்கு விடப்பட்ட இடைவேளையில் விடுதியில் சென்று அங்குள்ள மின்சார விசிறியில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த அறையில் தங்கிருந்த ஆசிரியர் ஒருவர் குவளை ஒன்றை எடுக்க சென்றபோது, இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையினை கண்டு நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் காவற்துறையினரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இவர் காதல் பிரச்சினையினால் தற்கொலை செய்து கொண்டார் என காவற்துறையினரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More