Home இலங்கை சாவகச்சேரி நகர நிதிநிறுவனக் கொள்ளை – மூவருக்கும் பிணை….

சாவகச்சேரி நகர நிதிநிறுவனக் கொள்ளை – மூவருக்கும் பிணை….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


சாவகச்சேரி நகர் பகுதியில் உள்ள நிதிநிறுவனம் ஒன்றில் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளார்.

சவகச்சேரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 19ஆம் திகதி புகுந்த கொள்ளையர்கள் காசாளரை மிரட்டி 18 லட்சத்து 91ஆயிரத்து 140 ரூபாயை கொள்ளையிட்டு தப்பி சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் குறித்த நிதி நிறுவனத்தின் பெண் காசாளரே தனது காதலன் மற்றும் நண்பனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார் என குற்றம் சாட்டி மூவரையும் கைது செய்தனர்.

கைது செய்ப்பட்ட மூவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் நேற்றைய தினம் மன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.

அதனை ஆராய்ந்த நீதிவான் மூவரையும் தலா 5 லட்ச ரூபாய் பெறுமதியான இரு ஆள் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More