Home இலங்கை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்…

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்…

by admin

அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை இந்திய உள்துறை அமைச்சு நீக்கியுள்ளது. வங்காள விரிகுடா கடலில் உள்ள தீவுக்கூட்டங்களை கொண்ட அந்தமான் நிகோபார் தீவுகள் சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்குகின்றன.

இந்த தீவுகளுக்கு வெளிநாட்டவர்கள் செல்ல வேண்டுமெனில் அவர்கள் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் பதிவு அலுவலகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது.  இதுதொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் வந்ததை தொடர்ந்து இந்த கட்டுப்பாட்டை தற்போது உள்துறை அமைச்சு நீக்கியுள்ளது. முன்னதாக மனிதர்கள் வாழக்கூடிய 29 தீவுகளுக்கும், மனிதர்கள் வாழாத 11 தீவுகளுக்கும் வெளிநாட்டவர்கள் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More