Home இந்தியா சபரிமலை கோயில் மடை திறப்பு இன்று – பெண்களை தடுக்கும் நபர்கள் மீது வழக்கு

சபரிமலை கோயில் மடை திறப்பு இன்று – பெண்களை தடுக்கும் நபர்கள் மீது வழக்கு

by admin


சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, கோயில் நடை திறக்கும் நாளான இன்று புதன்கிழமை மலைக்கு செல்லும் பெண்களை தடுக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும் என கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சபரிமலை அடிவாரத்திலேயே வாகனத் தணிக்கை செய்து, அதில் இளம் பெண்கள் இருந்தால் அவர்களை அங்கேயே இறக்கிவிட்டு வந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றிய காவல்துறையினர் அவர்கள் அமைத்திருந்த முகாம் பந்தலையும் அகற்றியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த வழியில் பயணிக்கும் பெண்களுக்கு இனி தொல்லைகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டக்காரர்களின் சோதனைச் சாவடியாக செயல்பட்டு வந்த நிலக்கல் கிராமத்தில் தற்போது காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More