Home இலங்கை இணைப்பு2 – திருக்கேதீஸ்வரம் மாந்தையில் இராணுவ வசம் இருந்த 05 ஏக்கர் காணி கையளிப்பு((வீடியோ)

இணைப்பு2 – திருக்கேதீஸ்வரம் மாந்தையில் இராணுவ வசம் இருந்த 05 ஏக்கர் காணி கையளிப்பு((வீடியோ)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க நேற்று செவ்வாய்க்கிழமை (17.10.18) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் பிரதேசச் செயலாளரிம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச்செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணி சுமார் 28 வருடங்களின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை (17.10.18) உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் மன்னார் பிரதேசச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த 5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணிகளும், திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி, மற்றும் வைத்திய சாலைக்கான காணிகளும் அடங்குவதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்தார்.

நேற்று (17.10.18) செவ்வாய்க்கிழமை மாலை இந்தக் காணி வைபவ ரீதியாக இராணுவ அதிகாரியினால் மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி சிவசம்பு கணகாம்பிகை அவர்களிடம் கையிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More