Home இலங்கை முதலிடம் பெற்ற மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி :

முதலிடம் பெற்ற மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாடசாலை மாணவர்களுக்கிடையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட ‘Anchor Students With Talent’ போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்று வெற்றிக்கேடயத்தை தன் வசப்படுத்திக் கொண்ட மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி எஸ்.கோபிகாவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(18) காலை இடம் பெற்றது.

மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று காலை 9 மணியளவில் வரவேற்பு ஊர்வலம் ஆரம்பமானது. இதன் போது பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் குறித்த மாணவியை வரவேற்று மன்னார் வலயக்கல்வி அலுவலகம் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதன் போது மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் குறித்த மாணவிக்கு சந்தன மாலை அணிவித்து கௌரவித்ததோடு,வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகளும் கௌரவித்தனர். அதனைத்தொடர்ந்து குறித்த மாணவி ஊர்வலமாக பாடசாலை வரை அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More