Home இந்தியா பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் புகையிரத மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் புகையிரத மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

by admin

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புகையிரத மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  இந்தியா முழுவதும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என தெரிவித்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சர்க்கரை ஆலைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் உள்ள புகையிரத பாதையை ஆக்கிரமித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் புகையிரத காவல்துறையினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்க்பபட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More