Home உலகம் அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயார்…

அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயார்…

by admin

அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடிதம் எழுதி உள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றினால் இருநாடுகளுக்குமிடையயே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிரம்புக்கு புட்டின் எழுதியுள்ள கடித்திலேயே இவ்வாறு பேச்சு நடத்த தயாராக இருப்பதா எழுதியுள்ளார்.

ரஸ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி எனவும் புட்டின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். அதேபோன்று சிரிய ஜனாதிபதி பாஷர் அல் அசாத்துக்கு புட்டின் எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கவும், இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் சிரிய அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ரஸ்யா தொடர்ந்து வழங்கும் என உறுதியளித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More