Home இலங்கை கழிவுகளை வீசியவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தண்டம்….

கழிவுகளை வீசியவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தண்டம்….

by admin

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வீதிகளில் கழிவுகளை வீசியவர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கபட்டதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளில் வீட்டுக்கழிவுகள் , வர்த்தக நிலைய, உணவாக கழிவுகள் ,, இறைச்சி கடை கழிவுகள் என கழிவுகளை வீதிகளில் வீசப்படுவதனால் , துர்நாற்றம் வீசுவதுடன் , சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதனால் வீதிகளில் பயணிக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டன.

அது தொடர்பில் மாநகர சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கி வந்துள்ளனர். அதனால் கடந்த மாதம் இறுதிவார பகுதியில் யாழ்.மாநகர சபை ஊழியர்கள் இரவு வேளைகளில் விசேட வீதி சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீதிகளில் கழிவுகளை வீசி செல்பவர்களை மடக்கி பிடித்தனர்.

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கழிவுகளை வீதிகளில் வீசியவர்களை மாநகர சபை ஊழியர்கள் மடிக்கி பிடித்திருந்தனர்.

அது தொடர்பில் ஆணையாளரிடம் கேட்டபோது , வீதிகளில் கழிவுகளை வீசிய குற்றசாட்டில் டிசம்பர் மாத இறுதி வார பகுதியில் 29 பேரை மாநகர சபை ஊழியர்கள் பிடித்தனர். அவர்களில் 26 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதித்தோம். ஏனைய மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.

அதேவேளை யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் கழிவுகள் வீசப்படும் இடங்கள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More