Home இலங்கை தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று சனிக்கிழமை இரண்டு படகுகளில் மீன் பிடிக்க வந்துள்ள அவர்கள் நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை அப்பகுதியில் கடல் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டு இருந்த காரைநகர் கடற்படையினரால் கைது செய்யபட்டனர். அத்துடன் அவர்களின் இரு படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்கபட்டு உள்ளனர். அவர்களை யாழ்.நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More