Home இலங்கை மன்னார் சமூக பொருளாதார நிறுவனத்தினால் வெள்ள நிவாரண பொருட்கள் கையளிப்பு.

மன்னார் சமூக பொருளாதார நிறுவனத்தினால் வெள்ள நிவாரண பொருட்கள் கையளிப்பு.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கடந்த மாதம் வட பகுதியில் உள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக ஒரு ,லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ; கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிதும் வெள்ள நிவாரண பொருட்கள் கிடைக்க பெறாத கிராமங்களான உழவனூர் நாதன் குடியிருப்பு, ,ராமனாதபுரம், புலுதியாறு ஆகிய கிராமங்களில் உள்ள 700 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் மன்னார் சமூக பொருளாதர மோம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடக ,ன்று ஞாயிற்றுக்கிழமை காலை (13) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒத்துழைப்பிற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட குறித்த கிராமங்களுக்கான பொருட்கள் மன்னார் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜாட்சன் தலைமையில் உரிய மக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிவாரணங்களை வழங்கும் நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள், கிராம சேவகர் மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டு சுமார் 25 ,லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து வழங்கி வைத்தனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More