Home இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காங்கேசன்துறை காவல்துறையினரினால் ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட எட்டு மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் படகு விபத்துக்குள்ளாகி கடலில் தத்தளித்த மீனவர்களை தாம் காப்பற்றியதாக காங்கேசன்துறை கடற்படையினர், காங்கேசன்துறை துறை காவல்துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டு மீனவர்களை ஒப்படைத்தனர்.

அவர்களை இன்று திங்கட்கிழமை காங்கேசன்துறை காவல்துறையினர் ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள். அதன் போது குறித்த எட்டு மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அதேவேளை குறித்த மீனவர்களுடன் வந்திருந்த இராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பையா மாரிசாமி எனும் மீனவர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More