Home இலங்கை தமிழக மீனவரின் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை

தமிழக மீனவரின் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை

by admin

குளோபல் தமிழ்pச் செய்தியாளர்

தமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு இன்று திங்கட்கிழமை காங்கேசன்துறை காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

அதன் போது நீதிவான் உயிரிழந்த மீனவரின் உறவினர்கள் பொறுப்பெடுக்க வந்தால் , அவர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறும், அல்லாவிடின் யாழில்.உள்ள இந்திய துணை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சடலத்தை ஒப்படைக்குமாறும் நீதிவான் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

அது தொடர்பில் யாழில்.உள்ள இந்திய துணை தூதரகத்துடன் காவல்துறையினர் தொடர்பு கொண்ட போது , சடலத்தை பொறுப்பேற்பது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க கால அவகாசம் கோரியுள்ளனர்.

அதனால் சடலம் தொடர்ந்து யாழ். போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More