Home இலங்கைகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,  கவனயீர்ப்பு நடையுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்….

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,  கவனயீர்ப்பு நடையுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்….

by admin

வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று (15.01.19) கவனயீர்ப்பு நடையை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

வவனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து கடை வீதி வழியாக நடையை ஆரம்பித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தளத்தை சென்றடைந்தனர். பின்னர், அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More