Home இந்தியா தமிழ்நாட்டில் மீண்டும் பன்றிக்காய்ச்சல்

தமிழ்நாட்டில் மீண்டும் பன்றிக்காய்ச்சல்

by admin


தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுவதால் அதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் பன்றிக்காய்ச்சல் பரவியதில் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்ததுடன் சிலர் உயிரிழந்துமிருந்தனர்.  இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனால் பன்றிக்காய்ச்சல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கி உள்ளதாகவும் தமிழ்நாட்டில் கடந்த முதலாம் முதல் 13ம் திகதி வரையான காலப்பகுதியில் 48 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல் குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பன்றிக்காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More