Home இலங்கை காணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…

காணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…

by admin

யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை இன்றைய விடுவிப்பதாக ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் தமது காணிகளை மீட்க வந்த காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். வடக்கில் 1000 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை இன்றைய தினம் மீள மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைதீவில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஓட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளுமாக விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் காலை இக் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் யாரினையும் இராணுவம் அவர்களது காணிக்குள் செல்ல அனுமதித்திருக்கவில்லை.

சுமார் மாலை 04 மணிவரை மக்கள் காத்திருந்த நிலையில் , குறித்த காணிகளை நாளைய தினமே விடுவிக்கப்படும் எனவும் அதன் பின்னரே மக்கள் காணிகளுக்குள் செல்ல முடியும் எனவும் இராணுவத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து காலையில் இருந்து மாலை காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More