Home இலங்கை ஒருவார காலப்பகுதியில், கேப்பாபுலவு காணிகள் குறித்து, தீர்க்கமான முடிவு?

ஒருவார காலப்பகுதியில், கேப்பாபுலவு காணிகள் குறித்து, தீர்க்கமான முடிவு?

by admin

இன்னும் ஒருவார காலப்பகுதியில் படையினர் வசமுள்ள கேப்பாபுலவு காணிகள் குறித்து, தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுத் தருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. இராணுவத்திடம் இருந்து அறிக்கையொன்றைப் பெற்று அதன் பின்னர் இவ்வாறு தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுத் தருவதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டப் பிரதிச் செயலாளர் வழங்கிய உறுதிமொழிக்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதியன்று, கேப்பாபுலவில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் விடுவிக்காவிடின் மக்கள் தமது சுயவிருப்பத்தின் பேரில் உள்நுழையவுள்ளதாகவும் அக்கூட்டணி தெரிவித்துள்ளது.

மருதானை சிஎஸ்ஆர் மண்டபத்தில், நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இதேவேளை டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர், வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை காணிகள் எதுவும் விடுவிக்கப்பட வில்லையென கூட்டணியின் அமைப்பாளர் சந்துன் துடுகல சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, கேப்பாபுலவு மக்கள், கடந்த 2 வருடங்களாக தமது காணியைக் கோரி போராடிவரும் நிலையில், இன்று வரை, அதற்கான தீர்வு எதுவும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் தென்னிலங்கை மக்களின் உதவியைக் கோரி நிற்பதாகத் தெரிவித்த அவர், நேற்றையதினம் பிரதமரிடமும் ஜனாதிபதியின் செயலாளருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடமும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு முழுவதும் 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்துக்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, பிரதமர் தெரிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More