Home இலங்கை போதைப்பொருள் செயற்பாடுகள் – இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி…

போதைப்பொருள் செயற்பாடுகள் – இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி…

by admin

போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவருக்கு தண்டனையை நிறைவேற்ற, சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து, நீதி அமைச்சினால் நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மரண தண்டனைக்கு உள்ளானவர்களின் பெயர் விவரம் குறித்தும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்த ஆவணங்களை, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும்,  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More