Home இலங்கை கிளிநொச்சியில் யானைகளால் நெற்செய்கை பாதிப்பு :

கிளிநொச்சியில் யானைகளால் நெற்செய்கை பாதிப்பு :

by admin

கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசங்களால் நெற்செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அறுவடைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இக் காலத்தில் வயல்களுக்குள் நுழையும் யானைகள் விளைந்த நெல்லை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

வன்னேரிக்குளத்தின் மண்ணியாகுளம் பகுதியில் மானாவாரி செயற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் நீர்ப்பாசன திட்டத்தில் நெற்செய்கையில் ஈடுபட்டவர்களும் யானைகள் ஏற்படுத்தும் அழிவுகளால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டபோதிலும், கிராமத்திற்குச் சென்று யானைவெடிகளை கூட வழங்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More