Home இலங்கை 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில்

71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில்

by admin

நாளை நடைபெறவுள்ள இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் கோலாகலமான முறையில் இடம்பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இந்த சுதந்திரதின வைபவத்தில் பிரதம விருந்தினராக மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ரஹிம் மொஹமட் கலந்துகொள்ளவுள்ளார்.

காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள சுதந்திர தின தேசிய வைபவத்தில் 865 இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின் பங்குபற்றலுடன் விசேட கலாசார நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முப்படையினர் மற்றும் காவல்துறையினரின்; விசேட அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதுடன் 25 துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன.

அரச நிறுவனங்கள், வீடுகள், தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை தேசியக்கொடியை பறக்கவிடுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More