Home இலங்கை புனித லூசியா விளையாட்டு மைதானத்திற்கு சென்ற நகர திட்டமிடல் அதிகார சபையின் பிரதிநிதிகள் – உறுதி மொழி

புனித லூசியா விளையாட்டு மைதானத்திற்கு சென்ற நகர திட்டமிடல் அதிகார சபையின் பிரதிநிதிகள் – உறுதி மொழி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் கை விடப்பட்டிருந்த நிலையில் நகர திட்டமிடல் அதிகார சபையின் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை 10 மணியளவில் குறித்த விளையாட்டு மைதானத்திற்கு சென்று செய்து நிலமையை அவதானித்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் அரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 5 வருடங்களை கடந்தும் குறித்த அபிவிருத்தி பணிகள் நிறைவடையாத நிலையில் காணப்படுகின்றது.

நகர திட்டமிடல் அதிகாரசபையின் (யூ.டி.ஏ) நிதி உதவியுடன், மன்னார் நகர சபையூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி பணிகளுக்கு நகர திட்டமிடல் அதிகார சபை 40 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது.
விளையாட்டு மைதானத்திற்கான சுற்று மதில் அமைத்தல்,பார்வையாளர் அரங்கு அமைத்தல்,மைதானத்தை சமப்படுத்தி மண் நிறப்புதல் மற்றும் மைதானத்தில் புல் வளர்த்தல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த மைதானம் சமப்படுத்தப்பட்டு,பல இலட்சம் ரூபாய் செலவில் வளர்க்கப்பட்ட புற்கள் அனைத்தும் கருகிய நிலையில் காணப்படுகின்றது.

ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் முழுமை பெறாத நிலையில் சுமார் 26 மில்லியன் ரூபாய் பணம் இது வரை அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அபிவிருத்தி பணிகள் முழுமை பெறாத நிலையில், அபிவிருத்தி பணிகள் மந்த கதியில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் அதிகார சபையின் இயக்குனர் மற்றும் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று குறித்த விளையாட்டு மைதானத்திற்கு சென்ஞ தந்து நிலமையை அவதானித்தனர்.

இதனைத் தொடர்ந்து விளையாட்டு மைதானத்திற்கான மிகுதி அபிவிருத்தி பணிகள் அணைத்தும் எதிர் வரும் யூன் மாதத்திற்கு முன் பூர்த்தி செய்து தரப்படும் என நகர திட்டமிடல் அதிகார சபையின் பிரதி நிதிகள் மன்னார் நகர முதல்வரிடம் உறுதிமொழி லழங்கியுள்ளனர்.

குறித்த விளையாட்டு மைதானத்தின் நிலை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்தி வெளி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More