இலங்கை விமானப் படைக்கு எம்.ஐ.17 உலங்கு வானூர்திகள் வாங்குவது தொடர்பாக ரஸ்யாவுடன், இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக ரஸ்யா நாளேடு ஒன்றுக்கு இந்த தகவலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.அமைதிப்படையின் பணிகளுக்காக ரஸ்யாவிடம் எம்.ஐ.17 உலங்குவானூர்திகளை வாங்குவது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment