Home இலங்கை மரண தண்டனை – சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடப்பாடுகளை, மீறுவதாக அமையும்…

மரண தண்டனை – சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடப்பாடுகளை, மீறுவதாக அமையும்…

by admin

மரண தண்டனை விதிப்பது தொடர்பான தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு சர்வதேச நீதிபதிகளின் ஆணையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளது.

குறிப்பாக மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடப்பாடுகளை இலங்கை மீறுவதாக அமையும் எனவும், ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் இச்செயற்பாடு நாட்டின் மனித உரிமைகளுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஆணையத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஃப்றெட்றிக் றவ்ஸ்கி எச்சரித்துள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் மரண தண்டனையை எதிர்ப்பதாகவும், இதனை வாழ்வுரிமை மீறலாகவும், மனிதாபிமானமற்ற சீரழிவாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர் வரும் இரண்டு மாதங்களில், எவ்வாறான தடைகள் வந்தாலும், மரண தண்டனையை நிறைவேற்றுவது உறுதி என கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More