Home இலங்கை யாழ்ப்பாணத்தில் தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா – இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்தானது…

யாழ்ப்பாணத்தில் தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா – இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்தானது…

by admin

யாழ்ப்பாணத்தில் தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்காவொன்று அமைக்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும்அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் அலரிமாளிகையில் வைத்து கையெழுத்திட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களும் கலந்து இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசையில் ஒன்றான இந்த பூங்கா வடமாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய அரசினால் அபிவிருத்தி மற்றும் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றத்தினை மேம்படுத்தும் முகமாக வடமாகாணத்தில் 46,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மானிய உதவியாக வழங்கப்பட்டுள்ளதும் குறிப்படத்தக்கது

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களான யாழ். கலாச்சார மையம் 27 பாடசாலைகளுக்கான கட்டிடங்கள், 3000 மழை நீர் சேகரிப்பு தொகுதிகள் 600 வீடுகளைக் கொண்ட 25 மாதிரிக் கிராமங்கள் ஆகியன அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நாடு முழுவதும் 70 ற்கும் மேற்பட்ட மக்கள நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More