Home உலகம் எகிப்தின் காசிம் பராகாத் கொலை வழக்கு – 28 பேரில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை…

எகிப்தின் காசிம் பராகாத் கொலை வழக்கு – 28 பேரில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை…

by admin

எகிப்தில் காசிம் பராகாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 28 பேரில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எகிப்தின சிரேஸ் அரச நட்டதரணியாக இருந்து காசிம் பராகாத் தீவரவாதிகளுக்கு எதிரான வழக்கில் அரச தரப்பில் முன்னிலையாகி பல தீவிரவாதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர் கடந்த 2015-ம் ஆண்டு தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த கார் மீது, தீவிரவாதிகளதற்கொலைத்தாக்குதல் மேற்கொண்டு அவரை கொலை செய்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 28 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அந்த 28 பேரில் 9 பேருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More