Home இலங்கைகிளிநொச்சி பசுமை பூங்கா இரண்டாவது தடவையாக அமைச்சரால் திறந்து வைப்பு

கிளிநொச்சி பசுமை பூங்கா இரண்டாவது தடவையாக அமைச்சரால் திறந்து வைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் 40 மில்லின் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பசுமை பூங்கா இன்று(22) மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதே பசுமை பூங்கா கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டிருந்தநிலையில் இன்றைய தினம் அமைச்சரால் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் வினவிய போது இது எங்களுடைய அமைச்சின் நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணியாகும். கடந்த முறை நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக எம்மால் சமூகமளிக்க முடியாது போய்விட்டது எனவே இன்றைய தினம் வருகை தந்து திறந்து வைத்துள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வின் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கரைச்சி பிதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More