Home இலங்கை ஆவா குழு உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

ஆவா குழு உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழில் இயங்கும் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என காவல்துறையினரினால்  அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபர்களின் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா என்வரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மானிப்பாய் கட்டப்பாலி ஒழுங்கையில் உள்ள குறித்த வீட்டின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தமது முகத்தினை துணியினால் மூடி கட்டியவாறு வீட்டினுள் புகுந்து வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதமாக்கி தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பியோடியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் மானிப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More