Home இலங்கை ரத்கம வர்த்தகர்கள் கொலை – கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கண்டுபிடிப்பு…

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கண்டுபிடிப்பு…

by admin

ரத்கம – ரத்ன உதாகம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு எரியூட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கப்ரக வாகனத்தினை கண்டுபிடித்துள்ளார்களென காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வான் ஒன்றில் கடத்தப்பட்ட இரு வர்த்தகர்களும் கொலை செய்யப்பட்ட பின்னர், கைப்பற்றப்பட்டுள்ள கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் அந்த கப் வாகனத்தின் உரிமையாளர் அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரெனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள காவல்துறை பரிசோதகரால் வர்த்தகரிடமிருந்து குறித்த கப் வண்டி பெறப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More