Home இலங்கை தலைமறைவான அட்மிரல் வசந்த கரன்னாகொட நீதிமன்றில் மனுத் தாக்கல்…

தலைமறைவான அட்மிரல் வசந்த கரன்னாகொட நீதிமன்றில் மனுத் தாக்கல்…

by admin

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைதுசெய்வதனை தடுக்க உத்தரவொன்றினைப் பிறப்பிக்க கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல், காணாமல் ஆக்கல் தொடர்பில் தன்னை கைதுசெய்ய புலனாய்வுப்பிரிவினர் முயல்வதாகவும் அதனை தடுத்து உத்தரவிடுமாறும் கோரி அட்மிரல் வசந்த கரன்னாகொட நேற்றையதினம் குறித்த மனுவினை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More