Home இலங்கை பிரதான பதையில் உள்ள வடிகால் சேதம் – கண்டு கொள்ளாத நிர்வாகம் :

பிரதான பதையில் உள்ள வடிகால் சேதம் – கண்டு கொள்ளாத நிர்வாகம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் நகர் மத்திய சுற்று வட்ட பகுதியில் உள்ள வடிகான் கால்வாய் எவ்வித பராமரிப்பும் இன்றி உடைந்த நிலையில் காணப்படுவதனால் பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகி வருகின்றனர்.

மன்னார் மத்திய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அரச பேருந்து சேவை நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள கால்வாயே இவ்வாறு சேதமாகி காணப்படுகின்றது.

பிரதான பாதைகளை ஒன்றினைத்து அதன் ஓரத்தில் தொடுக்கப்பட்டுள்ள குறித்த கால்வாயின் மேல் பகுதியில் உள்ள கொங்கிரீட்டினால் அமைக்கப்பட்ட மூடியானது பாதி உடந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து அவ் மூடிக்கு பொருந்தாத முறையில் சாதரணமாக அவ் வாய்காலானது தற்காலிகமாக பல நாட்களாக மூடப்பட்டு காணப்படுகிறது.

குறித்த கால்வாய் மூடியே பாத சாரிகள் கடவையாகவும் காணப்படுகின்றதுடன் அதனூடாக அரச பேருந்துகளும் பயணிக்கின்றன. அதே போன்று குறித்த உடைந்த கால்வாய் அருகிலே ஆட்டோ சாரதிகளுக்கான தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த வடிகானை உரியமுறையில் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More