Home இலங்கை வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு :

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு :

by admin

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற இருவர் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளதனையடுத்து நெடுங்கேணி காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அக் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக நெடுங்கேணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு மோட்டார் குண்டுகளும் வெடிக்காத நிலையில் மரம் ஒன்றில் இறுகிய நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இரண்டு குண்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக நெடுங்கேணி காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More