Home இலங்கை பிரியங்க பெர்னான்டோவுக்கெதிரான வழக்கு – மீள் விசாரணைக்கு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

பிரியங்க பெர்னான்டோவுக்கெதிரான வழக்கு – மீள் விசாரணைக்கு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

by admin

பிரித்தானியாவுக்கான இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கெதிரான வழக்கை எதிர்வரும் மே 7 ஆம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரித்தானிய நீதிமன்ற ஊழியர்கள் இவ்வழக்கை முன்னிலைப்படுத்துவதில் தவறிழைத்துள்ளதாக தெரிவித்ததன் அடிப்படையிலேயே இவ்வாறு பிரதம மஜிஸ்ட்ரேட் எம்மா ஆர்புத்நொட் (Emma Arbuthnot  ) இவ்வாறு மீள் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் சுதந்திர தின நிகழ்வின் போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வதாக சைகை மூலம் காண்பித்திருந்த விவகாரத்தில் கடந்த ஜனவரி மாதம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியாக பிரித்தானிய நீதிமன்றத்தால் இனங்காணப்பட்டார்.

பிரித்தானிய பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் துன்புறுத்தல் எனும் அடிப்படையிலேயே பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றவாளியாக இனங்காணப்பட்டு தீர்பளிக்கப்பட்டிருந்த நிலையில் அத் தீர்ரிபினையே கேள்விக்குள்ளாக்கி தற்போது மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More