Home இலங்கை வசந்த கரனாகொட மூன்றாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை :

வசந்த கரனாகொட மூன்றாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை :

by admin

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட இன்று மீண்டும் மூன்றாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிரயாகியுள்ளார்.

கடந்த 11 மற்றும் 13ம் திகதிகளில் உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாகிய அட்;மிரல் வசந்த கரன்னாகொட சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் வாக்குமூலமும் பதியப்பட்டிருந்தது.

இந்தநிலையில், விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில் அவரை இன்று மீள முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இன்றும் அவர் முன்னிலையாகியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More