Home இலங்கை மஸ்கெலியா பாடசாலையின் அதிபருக்கெதிராக ஆர்ப்பாட்டம்

மஸ்கெலியா பாடசாலையின் அதிபருக்கெதிராக ஆர்ப்பாட்டம்

by admin

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமனெலிய சிங்கள பாடசாலையில் தற்போது பணிப்புரியும் அதிபர், வேண்டாம் என கோரி இன்று (19.03.2019) சுமார் 50 ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பாடசாலை வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த 8 நாட்களாக பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தரவில்லை எனவும் மேலும் இப்பாடசாலைக்கு அதிபர் வருகைதந்த காலம் தொட்டு, பாடசாலைக்கு எந்தவிதமான அபிவிருத்தியும் இல்லை எனவும் தெரிவித்தே இவ்வாறு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பாடசாலை கற்றல் நடவடிக்கையும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது எனவும் இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கற்றல் நடவடிக்கையானது 10 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் போய்விட்டது. ஆசிரியர்களின் பற்றாக்குறையும் நிலவுகின்றது. ஆகவே வலய பணிப்பாளர் முன்வந்து உடனே அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் கல்வி அமைச்சர் முன்வந்து இந்த பாடசாலை தொடர்பான தகவல்களை பெற்று உடன் பாடசாலையின் கல்வி வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வழி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More