Home இந்தியா நிரவ் மோடியை கைது செய்ய பிரித்தானிய  நீதிமன்றம் உத்தரவு…

நிரவ் மோடியை கைது செய்ய பிரித்தானிய  நீதிமன்றம் உத்தரவு…

by admin

பணமோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் வைர வியாபாரியான   நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்த  பிரித்தானிய  நீதிமன்றம், அவரை கைது செய்ய  ஆணை  பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும்   அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாக்கு  மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில்  நிரவ் மோடி  பிரித்தானியாவில்  இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அத்துடன் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக அமுலாக்கத்துறை சார்பில் பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கிய மனு   லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிய நிலையில்  இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய ஆணை பிறப்பித்திருப்பதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

  இதையடுத்து நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை   நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரித்தானிய அரசு உத்தரவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More