Home இலங்கை கடற்படை தளம் அமைப்பதற்காக 232 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க ஏற்பாடுகள்

கடற்படை தளம் அமைப்பதற்காக 232 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க ஏற்பாடுகள்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடற்படை தளம் அமைப்பதற்காகவும் , சுற்றுலா அதிகார சபையின் தேவைகளுக்குமாக காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் தனியார் காணிகள் உள்ளடங்கலாக 232 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் 232 ஏக்கர் காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காகவும், சுற்றுலா அதிகார சபைக்காகவும் சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. என எமக்கு தகவல் கிடைத்துள்ளன.

எமது பிரதேசத்தில் உள்ள ஒரு அங்குல நிலத்தினை கூட நாம் சுவீகரிக்க அனுமதிக்க மாட்டோம். காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கபாட்டால் அதற்கு நாம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More