Home இலங்கை கிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:

கிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சைக்கு வடக்கின் பிரபல கண் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மலரவனின் உதவியும் ஒத்துழைப்பு கிடைக்கும் என யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதன் முதலாக கண் சத்திர சிகிச்சை ஆரம்பித்து வைக்கப்பட்ட போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வு மகிழ்ச்சியானது. இதற்காக உழைத்த அனைவரும் நன்றிக்குகரியவர்கள். ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கண் சத்திர சிகிச்சைக்கு தேவை ஏற்படுகின்ற போது உதவிகளையும் ஒத்துழைப்புக்களை கண் சத்திரசிகிசை நிபுணர் மலரவன் வழங்குவதற்கு தயாராக உள்ளார். ஏற்கனவே அவர் உதவிகளையும் வழங்கியிருக்கின்றார். எதிர் காலத்தில் அவரின் உதவி நிச்சயம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்

விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர் கிரிதரன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More