Home உலகம் பாகிஸ்தானில் இந்து பெண்களின் கட்டாய மதமாற்றம் குறித்த வழக்கில் புதிய திருப்பம்!

பாகிஸ்தானில் இந்து பெண்களின் கட்டாய மதமாற்றம் குறித்த வழக்கில் புதிய திருப்பம்!

by admin


பாகிஸ்தானில் இரண்டு இந்து பெண்களை கடத்தி பலவந்தமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக கூறப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு குறித்த விசாரணை பாகிஸ்தான் தலைநகரில் உள்ள இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆனால், புதிய திருப்பமாக இரண்டு பெண்களும் தங்களுக்கு முறையே 18 மற்றும் 20 வயது ஆகிறது என்றும், தாங்கள் தாங்களாகவே இஸ்லாம் மதத்தை தழுவியதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு நிறுவனங்களும், ஊடகங்களும் தங்களை தொந்தரவு செய்வதாகவும், அத்தகைய செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட இருவரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தங்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இரு பெண்கள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் துணை ஆணையாளரிடம் அப்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்களை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர்கள் துணை ஆணையரின் அனுமதி இல்லாமல் இஸ்லாமாபாத்தை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும், அப்பெண்களின் கணவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் பாகிஸ்தான் அரசமைப்பின்படி தாங்கள் விரும்பிய மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என்றும் அதையே தாங்கள் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தின் தலைமை நீதிபதி, சிலர் பாகிஸ்தானின் பெயரை கெடுக்க நினைப்பதாகவும், ஆனால் வேறு எந்த நாட்டைக் காட்டிலும் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அதிக உரிமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு குறித்த விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தியா இதனை மறுத்துள்ளது. அந்த பெண்களுக்கு 13 மற்றும் 15 வயதே ஆகிறது என்றும் அவர்கள் வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். “இந்த இளம் பெண்கள் தாங்களாகவே மதமாற்றம் மற்றும் திருமணம் குறித்து முடிவெடுத்திருக்க முடியாது என்பதை பாகிஸ்தான் பிரதமரும் ஒப்புக் கொள்வார்” என்றும் சுஷ்மா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கான காரணம் குறித்து பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மெஹ்டி ஹாசன் கூறுகையில், “பாகிஸ்தான் ஒரு மதம் சார்ந்த நாடு. எனவே மதம்சார்ந்த நாடால் பூரணமாக ஜனநாயக நாடாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நாட்டின் மதம் அல்லாத மக்கள் இயல்பாக இரண்டாம் குடிமக்களாகதான் நடந்தப்படுவர்” என்று அவர் தெரிவித்தார்.

“பாகிஸ்தான் அரசியல் அமைப்பு சிறுபான்மையினருக்கு சம உரிமையை வழங்குகிறது ஆனால் மதம் சார்ந்த சிந்தனையால் இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More