Home இலங்கை ரவி கருணாநாயக்க மன்னார் மடு திருத்தலத்திற்கு சென்றுள்ளார்

ரவி கருணாநாயக்க மன்னார் மடு திருத்தலத்திற்கு சென்றுள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் மடு திருத்தலத்திற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று வியாழக்கிழமை (28) மாலை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

-விசேட வானுர்தி மூலம் மடு திருத்தலத்திற்குச் சென்ற அமைச்சர் விசேட வழிபாட்டில் ஈடுபட்டார்.அதனைத்தொடர்ந்து மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார்,மன்னார் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மற்றும் அருட்தந்தையர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.

-இதன் போது மடு திருத்தலத்தின் பல்வேறு அபிவிருத்தி விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக மடு திருத்தலத்திற்கான வீதி மின் விளக்குகள் பொருத்துதல்,மடு திருத்தல பகுதியில் எதிர் வரும் காலங்களில் சூரிய மின்சக்தியூடாக மின் வழங்குதல் உள்ளிட்ட விடையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More