Home இலங்கை புத்தளத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

புத்தளத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

by admin

புத்தளம், தில்லையடி பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் காவல்துறையினருக்;கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரின் வீட்டிலிருந்து சுமார் 6600 ரெமடோல் போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து எடுத்துச் சென்று, இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்டோரை இலக்கு வைத்து குறித்த போதை மாத்திரைகளை சந்தேகநபர் விற்பனை செய்து வந்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புத்தளம் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More