Home இலங்கை முத்துராஜவெல பிரதேசத்திலிருந்து விமான நிலையம் வரை புதிய நிலக்கீழ் பாதை

முத்துராஜவெல பிரதேசத்திலிருந்து விமான நிலையம் வரை புதிய நிலக்கீழ் பாதை

by admin


விமானங்களுக்கு தாமதமின்றி எரிபொருளை வழங்குவதற்காக முத்துராஜவெல பிரதேசத்திலிருந்து விமான நிலையம் வரை புதிய நிலக்கீழ் பாதையொன்று அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் 40 வருடங்களுக்கு பின்னர் கொலன்னாவ தொகுதியில் எண்ணெய் தாங்கி ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் விமானங்களுக்கு தாமதமின்றி எரிபொருளை வழங்குவதற்கு முத்துராஜவெல பிரதேசத்திலிருந்து விமான நிலையம் வரை புதிய நிலக்கீழ் பாதை ஒன்று அமைக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More