Home சினிமா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கீர்த்தி சுரேஷ்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கீர்த்தி சுரேஷ்

by admin


மணிரத்னமின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பல்வேறு காலகட்டங்களில் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோருக்கும் இதை படமாக்கும் எண்ணம் இருந்தது. தொடர்ந்து இயக்குனர் மணிரத்னமும் இவ் முயற்சியில் ஈடுபட்டார்.

படத்துக்கு பெரிய தொகை செலவிட வேண்டி இருந்தது. நாவலில் இடம் பெற்றுள்ள வந்தியதேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன், குந்தவை, வானதி, நந்தினி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு முன்னணி நடிகர்-நடிகைகளை தேர்வு செய்வதும் சவாலாக காணப்பட்டது.

இதனால் பட வேலைகளை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது மணிரத்னம் அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்புக்கு தயாராகி உள்ளார். லைகா நிறுவனம் இத் திரைப்படத்தை தயாரிக்கின்றது.

இந்த படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு கார்த்தியும், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசும் தேர்வாகியுள்ளனர். விக்ரம், ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், மோகன்பாபு முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். விக்ரம் ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார்.

கீர்த்தி சுரேசிடம் சமீபத்தில் மணிரத்னம் கதை சொன்னதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் தற்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அரபிக்கடலன்டே சிம்ஹம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ளார். அமித் சர்மா இயக்கும் இந்தி படத்திலும் நடிக்கவுள்ளார். அதற்குப் பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More